கடனுக்கு வாங்கிய லாட்டரியில் ரூ.6 கோடி பரிசு.. கேரள லாட்டரி ஜாக்பாட்.. பெண்ணின் நெகிழச்சி செயல்.!
Kerala Kochi Lottery Won by Coli Worker
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி சுணங்கம்வேலி பகுதியை சார்ந்தவர் ஸ்மிஜா மோகன். இவர் அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கேரள அரசின் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், குழுக்களில் பம்பர் சீட்டுகளில் சில மீதமிருந்த நிலையில், அந்த சீட்டுகளை தனது நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு ஸ்மிஜா விற்பனை செய்துள்ளார். இந்த சீட்டுகளில் ஒரு சீட்டினை கீழ்மாடு பகுதியை சார்ந்த சந்திரன் என்பவர் கடனுக்கு பெற்றுள்ளார். அதன் புகைப்படம் வாட்ஸப்பில் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடன் லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பம்பர் தொகை பரிசு கிடைக்கவே, சீட்டை நேரடியாக எடுத்துக்கொண்டு சந்திரனின் வீட்டிற்கு சென்ற ஸ்மிஜா, சந்திரனிடம் ரூ.6 கோடிக்கான சீட்டினை கொடுத்துள்ளார். இந்த லாட்டரி சீட்டுக்கான ரூ.200 பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
தற்போது, ஸ்மிதாவின் செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kerala Kochi Lottery Won by Coli Worker