பறந்து பாய்ந்துவந்த இருசக்கர வாகனம்., 30 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர்.! அதிச்சியான சிசிடிவி காட்சிகள்.!
kerala idukki bike accident
கேரள மாநிலத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் டிரான்ஸ்பார்மரில் பறந்து சென்று விபத்துக்குள்ளானது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் டிரான்ஸ்பார்மரில் பறந்து சென்று மோதி விபத்துக்குள்ளான இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது அந்த சிசிடிவி கட்சியில் தெரியவந்துள்ளது.
அதே சமயத்தில் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், பறந்து சென்று டிரான்ஸ்பார்மர் மீது மோதும் அந்தக் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், நேற்று வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது அவரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, டிரான்ஸ்பார்மர் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
இதில் வாலிபர் தரையில் 30 தூரத்துக்கு இழுத்து சென்று கீழே விழுந்தார். அவருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தை விட்டு அந்த வாலிபர் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார ஊழியர்கள், சேதமடைந்த ட்ரான்ஸ்ஃபார்மர் பழுது நீக்கினர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் மின்சார துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
kerala idukki bike accident