ஜூன் 16 வரை ஊரடங்கு நீட்டிப்பு! சனி, ஞாயிறு முழு ஊரடங்கு! கேரள அரசு உத்தரவு!
Kerala govt extended the corona lockdown to June 16
நாடு முழுவதும் கொரோனா முதல் அலையை விட 2வது அலை மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோன பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
கேரளாவிலும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், மாநிலத்தில் ஊரடங்கு வருகிற 16ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என கேரள முதல் அமைச்சர் அலுவலகம் தெரிவித்து உள்ளது
இந்த ஊரடங்கு நீடிப்பில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தொழிற்சாலைகளுக்கான உற்பத்தி சார்ந்த பொருட்கள், கட்டுமான பொருட்கள் மற்றும் வங்கிகள் ஆகியவை தற்போது உள்ள நடைமுறையிலேயே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வருகிற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கேரளாவில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
English Summary
Kerala govt extended the corona lockdown to June 16