ஜூன் 16 வரை ஊரடங்கு நீட்டிப்பு! சனி, ஞாயிறு முழு ஊரடங்கு! கேரள அரசு உத்தரவு!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனா முதல் அலையை விட 2வது அலை மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோன பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 

கேரளாவிலும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், மாநிலத்தில் ஊரடங்கு வருகிற 16ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என கேரள முதல் அமைச்சர் அலுவலகம் தெரிவித்து உள்ளது

இந்த ஊரடங்கு நீடிப்பில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தொழிற்சாலைகளுக்கான உற்பத்தி சார்ந்த பொருட்கள், கட்டுமான பொருட்கள் மற்றும் வங்கிகள் ஆகியவை தற்போது உள்ள நடைமுறையிலேயே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் வருகிற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கேரளாவில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala govt extended the corona lockdown to June 16


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->