கேரளாவில் மே 30 வரை ஊரடங்கு.. மலப்புரத்தில் கடும் ஊரடங்கு அமல் - முதல்வர் பினராயி விஜயன்.!!
Kerala Govt Extend Lockdown till 30 May 2021
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது ஓரளவு நிவர்த்தியாகியுள்ளது. ஆனால், திடீரென கருப்பு பூஞ்சை தொற்று அதிகளவில் ஏற்பட தொடங்கியது.
கொரோனா பரவல் ஊரடங்கால் வாழ்வாதாரமும் சிதைந்து பாதிக்கப்பட்டு வரும் மக்கள், அடுத்தடுத்த கொரோனா ஊரடங்கு மற்றும் கொரோனா பரவலின் அலைகள் தொடர்பான அச்சத்தில் சிக்கிக்கொண்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மத்திய அரசு சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கேரளா மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
அங்கு நாளொன்றுக்கு 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் மே மாதம் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ள நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kerala Govt Extend Lockdown till 30 May 2021