குழந்தையை தத்தெடுத்த 15 நாட்களில் தாய் மரணம்.. கதறியழுத பச்சிளம் குழந்தை.! - Seithipunal
Seithipunal


பெண் குழந்தையை தத்தெடுத்த பதினைந்தே நாட்களில், விபத்தில் தாய் இறந்த சோகம் அரங்கேறியுள்ளது. 

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியைச் சார்ந்தவர் ஜாய். அவரது மனைவி ஜாலி. இந்த தம்பதிக்கு கடந்த 11 வருடங்களாக குழந்தை இல்லை. இந்நிலையில், கொரோனா காரணமாக பெங்களூரில் பணியாற்றி வந்த ஜாலி, சொந்த ஊருக்கு சென்று சிறிய கடையை தொடங்கியுள்ளார். 

குழந்தையில்லாமல் இருந்த தம்பதியினர், டெல்லியில் லட்சுமி என்ற 6 வயது பெண் குழந்தையை தத்தெடுத்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக கேரளா வந்துள்ளனர். இவர்கள் மூவரும் ஊருக்கு வந்து வளர்ப்பு மகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், உற்றார் உறவினர்களிடம் தங்களின் மகளை காண்பித்து அறிமுகப்படுத்தி மகிழ்ந்துள்ளனர். 

உறவினர்களும் தம்பதிகளை புன்முறுவலுடன் வரவேற்று விருந்தளித்தனர். இந்த நிலையில், உறவினரின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தம்பதிகள், பின்னர் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டு இருந்தனர். 

இதன்போது, அவ்வழியாக வந்த கார் இவர்களின் வாகனத்தில் மோதவே, விபத்தில் ஜாலி துடிதுடித்து பலியாகியுள்ளார். சிறுமி மற்றும் அவரது வளர்ப்பு தந்தை காயத்துடன் உயிர்தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தவே, 15 நாட்களாக தன்னை அன்புடன் பாதுகாத்து வந்த தாய் மறைந்ததால், குழந்தை இலட்சுமி கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Foster Mother Died within 15 Days in Kottayam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->