வளர்ப்பு நாய்க்கு ஏற்ற ஜோடி தேடி திருமணம் செய்து வைத்த குடும்பம்..! அந்த மனசு தான் சார் கடவுள்..!! - Seithipunal
Seithipunal


நாய்களுக்கு திருமணம் நடத்தி வைத்த படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் திரிசூர் மாவட்டம் வாடானப்பள்ளி பகுதியில் வசித்து வருவர்கள் ஆகாஷ் மற்றும் அர்ஜூன். சகோதரர்களான இவர்கள் ஆசிட் என்ற நாயை செல்ல பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

90 கிட்கள் திருமணத்திற்கு வரன் தேடி வரும் நிலையில், இவர்கள் சற்று வித்யாசமாக தங்கள் செல்ல பிராணிக்கு வரன் தேடியுள்ளனர். ஆனால் ஆசிடுக்கு  வரன் அமைந்த பாடு இல்லை.

ஆனால், அவர்கள் தங்கள் முயற்சியை கைவிடவில்லை. அவர்களின் விடா முயற்சிக்கு பலனாய் ஆசிடுக்கேற்ற ஜோடி கிடைத்தது.

இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து அந்த ஜோடிக்கு ப்ரீ வெட்டிங்க் போட்டோ சூட் நடத்தினர்.

இதனை அடுத்து,  இந்த ஜோடியின் திருமணத்தை நடத்த தனி ரெசார்ட் புக் செய்து மிக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்த திருமண விழாவிற்கு உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.இந்த திருமணம் கேரளாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala family hosts wedding of pet dogs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->