கடை வீதியில் பற்றி எறிந்த சிப்ஸ் கடை! தெறித்து ஓடிய மக்கள்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பரபரப்பான கடைவீதியில் சிப்ஸ் கடையில் ஒன்றில் தீ விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா கடை வீதியில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தானது, அருகில் இருந்த 5 கடைகளுக்கு பரவியதால், பதட்டத்தில் மக்கள் தலைதெறிக்க ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் தீ பற்றிய சிப்ஸ் கடையில் தீயை அணைக்கும் போது, கடையிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தீயணைப்பு வீரர்கள் அதிர்ஷ்ட்டவசமாக உயிர்தப்பினர். 

சம்பவம் குறித்து வெளியான முதல்கட்ட விசாரணையில், 'நம்பர் ஒன் சிப்ஸ்' என்ற அந்த  கடையில், சிப்ஸ் போடும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, தீ அருகில் இருந்த பேக்கரி கடை, செருப்பு கடை மற்றும் மொபைல் கடைக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் சிப்ஸ் கடை உள்ளிட்ட 5 கடைகள் எரிந்து நாசமாகின.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala chips shop fire Accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->