சிறுத்தையை வேட்டையாடி சாப்பிட்ட கேரள சேட்டன்ஸ்.. ஆப்படித்த வனத்துறை.!
Kerala Cheetah Hunted and Eat by Kerala Idukki Person Forest Department Arrest
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாங்குளம் வனச்சரக பகுதியில், சிலர் சிறுத்தையை வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர வேட்டையில், சூரிய கோஸ், வினோத், வின்சென்ட், பினு, குஞ்சப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும், இவர்கள் சிறுத்தை வேட்டையாடியது உறுதியானது. இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், 5 பேரும் கடந்த புதன்கிழமை அன்று காட்டுப் பகுதிக்குச் சென்ற நிலையில், சிறுத்தைக்கு சுருக்கு பிடி வைத்து பிடித்துள்ளனர்.
சிறுத்தை பல மணி நேரம் போராடி உயிரிழந்த நிலையில், இதன் பின்னர் அங்கு சென்ற வினோத் யாருக்கும் தெரியாமல் சிறுத்தையை தூக்கி வந்து சமைத்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையின் தோல் மற்றும் பற்கள் ஆகியவற்றைக் வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kerala Cheetah Hunted and Eat by Kerala Idukki Person Forest Department Arrest