கேரளாவில் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. 57 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
Kerala bus Accident 57 members admitted hospital
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு அரசு பேருந்து மீது சுற்றுலா பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது இதில் 57 பேர் காயமடைந்தனர்.
கொல்லம் ஊரகப் பகுதியில் உள்ள சித்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப்புழா-மடத்தாரா சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயமடைந்தார் 15 பேர் கடக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காயமடைந்தவர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிகள் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
English Summary
Kerala bus Accident 57 members admitted hospital