நாடகக்காதல்.. பெண்மணிக்கு குழந்தை.. கொடூர காதலனால் அரங்கேறிய சோகம்.!
Kerala Baby Murder Love Marriage Police Investigation
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் நெடுமாங்காடு பகுதியை சார்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது 25). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவருக்கும் திருவல்லம் பாச்சலூர் பகுதியை சார்ந்த பெண்ணிற்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில், உன்னி கிருஷ்ணின் வற்புறுத்தலால் அவனின் ஆசைக்கு பெண்மணி இணங்கியுள்ளார்.
இதனையடுத்து பெண் கர்ப்பிணியாகவே, நான் உன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளான். இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் வீட்டார் அங்குள்ள திருவல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், சமரசம் செய்து உன்னி கிருஷ்ணனுடன் திருமணம் செய்து வந்துள்ளனர்.
இதன்பின்னர், கடந்த 40 நாட்களுக்கு முன்னதாக பெண்மணிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், கேரள வழக்கப்படி பாய்ச்சலூரில் இருக்கும் பெண் வீட்டில், குழந்தைக்கு நூல் கட்டும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் குழந்தையை தனது பெற்றோர்களிடம் காட்டுகிறேன் என்று குழந்தையை கொண்டு சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திருப்பவில்லை. அலைபேசியில் அழைத்தும் பலனில்லை.
இதனால் சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, கொடூரன் உன்னி கிருஷ்ணனை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். இதில், குழந்தையை கொலை செய்து, பாய்ச்சலூர் ஆற்றில் வீசியதாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து குழந்தையின் உடலை 3 மணிநேர தேடலுக்கு பின்னர் மீட்கப்பட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உன்னி கிருஷ்ணனை கைது செய்த காவல் துறையினர் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kerala Baby Murder Love Marriage Police Investigation