50 வயதிலும் மக்களுக்கு உணவை படகில் சென்று விநியோகம் செய்யும் நபர்.. கரோனா ஊரடங்கு எதிரொலி.!!
Kerala Alappuzha man give food and others
இந்தியா முழுவதிலும் கரோனா வைரஸின் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால் மக்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டு, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்க மாநில அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாநிலத்தில் கேரள மாநிலமும் உள்ள நிலையில், கேரள மாநிலத்திற்கு செல்லும் பிற மாநில இணைப்பு சாலைகளும், எல்லைகளும் அதிரடியாக மூடப்பட்டது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவின் பெரும்பாலான பகுதிகள் ஆற்றால் சூழப்பட்டு இருக்கும் இடங்களாக இருக்கிறது. இந்த இடங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் பிற போக்குவரத்து உதவிகள் ஊரடங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், 50 வயதாகும் நபர் மக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்து வருகிறார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kerala Alappuzha man give food and others