4 வயது மகனை கொலை செய்து, பெற்றோர்கள் தற்கொலை.! பெரும் அதிர்ச்சி சம்பவம்.!
keral 4 years old son killed
4 வயது மகனை கொலை செய்துவிட்டு, பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில். இவருடைய மனைவி கிருஷ்ணேந்து. இந்த தம்பதிகளுக்கு ஆதவ கிருஷ்ணன் என்ற 4 வயது மகன் உள்ளான். சுனில் வெளிநாட்டில் வேலை செய்து, அதில் கிடைத்த பணத்தின் மூலம், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் வீடு கட்ட வேலைகளை ஆரம்பித்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை வெகு நேரமாக அவர்களின் வீடு பூட்டியே இருந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் மற்றும் பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது வீட்டின் உள்ளே நுழைந்து அவர்களின் அறை கதவை தட்ட முயன்றபோது, கதவு தானாகவே திறந்திருந்தது.
உள்ளே சென்று பார்த்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சிறுவன் ஆதவ கிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தான். அதே அறையில் சுனில் மட்டும் இருந்து பிணமாக கிடந்தனர்.
இதனைப் பார்த்த பெற்றோர்கள் கதறி அழுதனர். பின்னர் போலீசாருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் முதலில் மகனை கொலை செய்து விட்டு, பின்னர் அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
4 வயது மகனை கொலை செய்துவிட்டு பெற்றோர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
keral 4 years old son killed