எழுத்தாளருக்கு பதிலடி கொடுத்த ரஹ்மான் மகள்.! மீண்டும் கிளம்பிய புர்கா சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆம் ஆண்டு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் தனது மகள் கதீஜாவோடு கலந்துகொண்டார். அப்போது கதீஜா தனது உடல் முழுவதையும் மறைக்கும் விதமாக புர்கா அணிந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அப்போது இதுகுறித்து, கதிஜா ‘நான் தேர்ந்துகொண்ட பாதை இது, இதற்கும் என்னுடைய தந்தைக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை’ என்றுத் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பின்னர் மீண்டும் இந்த சர்ச்சை எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் மூலமாக கிளம்பி இருக்கின்றது. அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் படைப்புகள் மிகவும் பிடிக்கும். ஆனால், அவருடைய அன்பான மகளைப் பார்க்கையில் ஒருவித புழுக்கம் எனக்கு ஏற்படுகிறது. படித்த பெண்கள் கூட, இப்படி எளிதாக மூளைச்சலவை செய்யப்பட்டுவிடுவதைப் பார்க்கும்போது மிகுந்த மனவேதனையாக இருக்கிறது” என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கதிஜா ரஹ்மான் ‘ஒருவருடம்தான் ஆகிறது. அதற்குள் இந்த விஷயம் மீண்டும் பேசுபொருளாகி இருக்கின்றது. தஸ்லிமா நஸ்ரின், எனது உடையால் புழுக்கம் அடைந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள். வெளியே சென்று நல்ல காற்றை சுவாசியுங்கள். ஒரு பெண்ணை இழுத்து அவரின் அப்பாவுக்கு பிரச்சினை கொடுப்பது என்பது பெண்ணுரிமை கிடையாது. அதேப்போல நான் என்னுடைய புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பி கருத்து கேட்கவில்லையே.?’ என கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kathija rahman replies to thasleema nazrin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->