காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை! பயங்கரவாதி சுட்டுக்கொலை.!
Kashmir terrorist attack
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் துர்க்வாங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.
அவனது உடலை கைப்பற்றி சோதனை செய்த போது அவன், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பகிதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.