4 பேர் கும்பலால் பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம், சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை..! - Seithipunal
Seithipunal


பெண்ணை கடத்தி நிர்வாணப்படுத்தி, சிகிரெட்டால் சூடு வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காமுக கூட்டம் 8 மாதங்கள் கழித்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள யாதகிரி மாவட்டம் அருகேயுள்ள சகாபுரா கிராமத்தை சார்ந்த பெண்மணி, சகாபுரா நகரில் இருந்து கிராமத்திற்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். இதன்போது, அங்கு காரில் வந்த 4 பேர், பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், பெண்ணை நிர்வாணப்படுத்தி கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாது, அவரை அடித்து தாக்கி துன்புறுத்தி இருக்கின்றனர். 

மேலும், அவரது உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்து இருக்கின்றனர். பின்னர், பெண்ணிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், நகைகள், செல்போன்கள் போன்றவற்றை பறித்து சென்று இருக்கின்றனர். இதுகுறித்த கொடூரத்தை வீடியோவாகவும் கும்பல் பதிவு செய்து இருக்கிறது. கொலை மிரட்டலும் கொடூரன்களால் விடுக்கப்பட்டதால், பயந்துபோன பெண்மணி யாரிடமும் இதனை கூறாமல் இருந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக நடந்துள்ளது. 

இந்த நிலையில், யதாகிரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்துவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது. இந்த விசயம் தொடர்பாக சகாபுரா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டறிந்து விசாரணை நடந்தது. பெண்மணி 4 பேரால் கடத்தப்பட்டு தனக்கு நடந்த துயரம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பெண்மணி புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நிங்கராஜ் ஹளெபெடி, பீமா சங்கர், அய்யப்பா, சரணு ஆகியோர் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். இவர்கள் அனைவரையும் கைது செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Yadgir Woman Sexual Abuse by 4 Man Gang 8 Months Ago Now Video Leaked Social Media Culprits Arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->