தாய் - தந்தை சண்டை.. ஒன்றரை வயது குழந்தையின் அலறல்.. இரத்த வெள்ளத்தில் அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் புறநகர் ஆனேக்கல் பகுதியை சார்ந்தவர் அருண். இவரது மனைவியின் பெயர் யோகஸ்ரீ (வயது 27). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

இவர்களுக்கு ஒன்றரை வயதுடைய குழந்தை உள்ள சூழலில், கணவன் - மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் இவர்களுக்குள் வழக்கம்போல வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அருண் தனது மனைவியை அரிவாள்மனை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து அருணை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தை தாயை இழந்து பரிதவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka wife murder by husband police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->