பெற்றோரின் கண்டிப்பிற்கு பயந்து கற்பழிப்பு நாடகம்.. எச்சரித்து அனுப்பிய காவல்துறை.!
Karnataka Uttara Kannada girl Act Sexual abuse Drama Police Revokes Mystery
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்திரகன்னடா எல்லாப்புரா நந்தொள்ளி கிராமத்தை சார்ந்த சிறுமி, 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சரிவர வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு சென்று வந்த நிலையில், சம்பவத்தன்று தலைமை ஆசிரியர் மாணவியை கண்டித்துள்ளார்.
இதனைகண்டுகொள்ளாத மாணவி, தினமும் வீட்டுப்பாடம் எழுதாமலேயே பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆசிரியர் மாணவியின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து புகார் தெரிவித்த நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்று கூறியுள்ளார்.
இதன்பின்னர், மாலை வீட்டிற்கு வந்த மாணவியை பெற்றோர்கள் கண்டிக்கவே, படிப்பில் கவனம் செலுத்த கூறி அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் மனக்கவலைக்கு உள்ளாகிய சிறுமி, வீட்டிற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
பெற்றோர்கள் மகளை காணாது ஒருமணிநேரம் பரிதவித்த நிலையில், பின்னர் சிறுமி அழுதபடி வீட்டிற்கு வந்து, தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளாகிய பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே, அங்கு அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியானது. பின்னர் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், பெற்றோர்களின் அறிவுரையால் மனமுடைந்து காட்டுப்பகுதிக்கு சென்றதும், பின்னர் பயத்தால் வீட்டிற்கு திரும்பியபோது பெற்றோர்களிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமிக்கு அறிவுரை கூறி காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka Uttara Kannada girl Act Sexual abuse Drama Police Revokes Mystery