சொல்லச்சொல்ல கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தடையாக இருந்த கணவன் கொலை.!
Karnataka Udupi Wife Murdered Husband by his Affair Boy Police Arrest 16 Feb 2021
கள்ளக்காதல் உறவுக்கு தடையாக இருந்த கணவனை, கள்ளக்காதலனை விட்டு கொலை செய்ய வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி ஹொசுரூ பகுதியை சார்ந்தவர் நவீன் நாயக். இவரது மனைவி பிரியா. இவர்கள் இருவரும் நன்றாக வசித்து வந்த நிலையில், இவர்களின் அண்டை வீட்டில் கவுதம் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நவீனிற்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்டு இருந்த கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் ஒரே இல்லத்தில் இருந்தாலும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இதனை கவுதம் எப்படியோ கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து, பிரியாவை தனது வலையில் வீழ்த்த திட்டமிட்ட கொடூரன், திட்டமிட்டபடி பிரியாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். இந்த கள்ளக்காதல் பழக்கமானது நவீனிற்கு தெரியவரவே, பிரியாவிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
இதனால் தம்பதிகளுக்குள் தகராறு ஏற்படவே, கள்ளகாதலனிடம் தனது கணவரை கொலை செய்ய கூறி பிரியா முறையிட்டுள்ளார். இதனையடுத்து, நவீனை தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கவுதம் கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து 3 மணிநேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka Udupi Wife Murdered Husband by his Affair Boy Police Arrest 16 Feb 2021