பயங்கர வெடிவிபத்து.. 8 பேர் பலி.. மக்கள் பீதி.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் வெடி பொருளை ஏற்றி வந்த வாகனம் வெடித்து சிதறியது. நேற்றிரவு நடந்த இந்த வெடிவிபத்தில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதால் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தது. 

கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சத்தில் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் கல்குவாரி டைனமைட் என்ற வெடி பொருட்களை ஏற்றி சென்ற வாகனம் வெடித்து சிதறிய தெரியவந்துள்ளது. 

இந்த வெடி விபத்தில் 8 பேர் பலியானதாக ஷிவமோகா மாவட்ட ஆட்சியர் சிவகுமார் தெரிவித்துள்ளார். பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka terrible blast


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->