ராஜ நாகத்தின் வாலை பிடித்த உதவியாளர்.. கழுத்தை பிடிக்க தவறியதால் பரபரப்பு.. காத்திருந்த பேரதிஷ்டம்.!
Karnataka Snake Capturer luckily escape King Cobra Twice Attack
ராஜநாகத்தை பிடிக்க முயற்சிக்கும் போது, தன்னை பிடிக்க வந்தவரை பாம்பு கடிக்க முயற்சித்த நிலையில், நூலிழையில் ஒருவர் உயிர் தப்பும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்திலுள்ள சிவமொக்கா வனப்பகுதியில், மரத்தின் கீழே ராஜநாகம் ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தரவே, சம்பவ இடத்திற்கு பாம்பு பிடிப்பவர் விரைந்துள்ளார்.
இவர் ராஜநாகத்தை பிடிக்க முயற்சி செய்யவே, இதன் போது அவரின் உதவியாளர் பாம்பின் வாலை பிடித்து தூக்கி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாம்பு அவரை கடிக்க முயற்சித்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் பதற்றத்துடன் தப்பி இருவரும் கீழே சரிந்துள்ளனர்.
மீண்டும் அந்த பாம்பு கடிக்க முயற்சிக்கவே, இரண்டாவது முறையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது. பாம்பு பிடிக்க வந்தவருக்கு இரண்டு முறை அதிஷ்டம் காத்திருந்தால், அவர் பத்திரமாக வீடுபோய் சேர்ந்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka Snake Capturer luckily escape King Cobra Twice Attack