நண்பன் என்ற பெயரில் தோழிக்கு பாலியல் தொல்லை... ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி..!!
Karnataka sexual torture police investigation
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் கல்லூரி மாணவியை மிரட்டிய காமுகனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி, அங்குள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அப்பகுதியை சார்ந்த அப்துல் ஜவாத் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும், இது குறித்த புகாரில், கடந்த மூன்று வருடத்திற்கு முன்னதாக ஜவாத் எனக்கு அறிமுகம் ஆனார்.
நாங்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நண்பன் குறித்து எனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினேன். கல்லூரியில் பயின்று வந்த சமயத்தில் ஹோட்டல் மற்றும் உணவகத்திற்கு சென்றுள்ளோம். ஜவாத் அவ்வப்போது எடுக்கும் புகைப்படத்தை விளையாட்டு தனமாக எண்ணிய நிலையில், ஜவாத் தனது விபரீத எண்ணத்தை காண்பிக்க துவங்கினான்.
மேலும், துவக்கத்தில் எனது புகைப்படத்தை சமூக ஊடகத்தில் அவதூறாக பரப்புவதாக காமுகன் கூறி மிரட்டினான். இதனால் முதலில் ரூ.4.5 இலட்சம் கொடுத்த நிலையில், தனது பெயரில் சமூக வலைத்தளத்தில் போலியான பக்கத்தை உருவாக்கி, அவதூறாக பதிவுகளை பதிவு செய்து வந்துள்ளார். மேலும், இதற்கும் மேலாக பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யவும் மிரட்டியுள்ளான். இதற்கு பெண் இணங்காத பட்சத்தில் மாபிங் செய்து புகைப்படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளான் என்று கூறியுள்ளார்...
இதனைப்போன்று அங்குள்ள மற்றொரு பகுதியில் 27 வயது பெண்மணி அமிலம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த பெண்மணி ரஞ்சித் என்ற வாலிபருடன் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில், பிறந்தநாள் விழாவில் எடுத்த புகைப்படத்தை வைத்து காமுகன் மிரட்டியுள்ளான். மேலும், சில மாதத்திற்கு பின்னர் பெண்ணிற்கு திருமணம் முடிந்த நிலையில், இந்த துயரம் அரங்கேறியுள்ளது.
மேலும், தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று காமுகன் மிரட்டியுள்ளான். இதனால் பெண்மணி தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில், ரஞ்சித்தை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவிக்கும் பட்சத்தில், தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka sexual torture police investigation