கர்நாடக மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு.!!
Karnataka positive symptoms corona virus man died
இந்தியாவில் கரோனாவால் 753 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் இதுவரை பலியாகி இருந்தனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் இருந்து மார்ச் 5 ஆம் தேதி டெல்லிக்கு சென்ற இவர், மார்ச் 11 ஆம் தேதி கர்நாடகாவுக்கு திரும்பியுள்ளார். இவர் இரயில் மூலமாக பயணம் செய்துள்ளார். இவரது வயது 65 ஆகும் நிலையில், இவர் தற்போது உயிரிழந்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka positive symptoms corona virus man died