நாகப்பாம்பாக மாறிய கணவன்., நான்கு நாட்களாக குடித்தனம் நடத்திய பெண்ணால், பீதியில் தெரு வாசிகள்.! - Seithipunal
Seithipunal


உயிரிழந்த கணவர் தான் நாகப்பாம்பாக மறுபிறவி எடுத்து, வீட்டுக்கு வந்து உள்ளதாக நம்பிய மூதாட்டி ஒருவ,ர் அந்த நாகப்பாம்பு உடன் வசித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், குல்லஹள்ளி கிராமத்தில் வசித்து மூதாட்டி வருபவர் வசித்து மானசா. இவரின் கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதன்காரணமாக மானசா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டுக்கு நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளது.

இதனைக்கண்ட மானசா இறந்துபோன தனது கணவர் தான் நாகப்பாம்பாக மறுபிறவி எடுத்துள்ளதாகவும், அவர் தன்னை தேடி வந்துள்ளதாகவும் எண்ணினார். 

அதேபோல் அந்த நாகப்பாம்பும் கடந்த 4 நாட்களாக அவரது வீட்டிலேயே குடி புகுந்து விட்டது. இதுகுறித்து அந்த தெரு வாசிகளுக்கு தெரியவரவே, அவர்கள் அந்த நாகப்பாம்பை குடியிருப்பு பகுதியிலிருந்து விரட்ட முயற்சி செய்தனர்.

ஆனால் மானசா எனது கணவர்தான் மறுபிறவி எடுத்து நாகப்பாம்பாக வந்துள்ளார். அவரை இங்கிருந்து விரட்டக் கூடாது என்று அந்த தெருவாசிகள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் என்ன செய்வது என்று அறியாத தெருவாசிகள், வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka old lady snake issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->