கட்டிய மனைவி, அழகிய 2 குழந்தைகள் இருந்தும் கல்லூரி மாணவியுடன் கள்ளக்காதல்.. விடுதியில் விதி முடிந்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மண்டியா மாவட்டம் நாகமங்களா கொப்பலு கிராமத்தை சார்ந்தவர் லோகேஷ் (வயது 39). இவர் சிவில் என்ஜினியராக பணியாற்றி வைத்த நிலையில், திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், அப்பகுதியை சார்ந்த அஞ்சட்டிஹள்ளி கிராமத்தை சார்ந்த அமுல்யா (வயது 22) என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாடளடவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், லோகேஷிற்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள விஷயத்தை அறிந்தும் அமுல்யா காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் மைசூருக்கு திருமணம் முடிந்த ஜோடி போல சென்று வந்துள்ளனர். அங்கு தனியார் விடுதியில் அறையெடுத்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், மனைவியை பிரிந்து தன்னை திருமணம் செய்துகொள்ளக்கூறி அமுல்யா லோகேஷை வற்புறுத்தவே, லோகேஷ் மறுப்பு தெரிவித்து வந்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், லோகேஷும் - அமுல்யாவும் மைசூருவில் உள்ள ஹெப்பால் பகுதியில் இருக்கும் தனியார் விடுதிக்கு வந்துள்ளனர். 

அங்கு மீண்டும் கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளக்கூறி அமுல்யா மீண்டும் லோகேஷை வற்புறுத்தியுள்ளார். இதன்போது, தனக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி இருப்பதாக லோகேஷ் கூறவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் இருவருக்கும் இடையே கைகலப்பாக முற்றியுள்ளது. 

இதனால் கடுமையான ஆத்திரத்திற்கு சென்ற கொடூரன் லோகேஷ் கல்லூரி மாணவியின் மனதை கெடுத்து உல்லாசமாக இருந்தது மட்டுமல்லாது, அமுல்யாவை அடித்து துன்புறுத்தி உள்ளான். பின்னர் கயிற்றால் அமுல்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளான். அமுல்யா உயிரிழந்ததும் அதிர்ச்சியடைந்த லோகேஷ், தனது நண்பர் நித்தின் என்பவருக்கு தொடர்புகொண்டு நடந்ததை கூறி தற்கொலை செய்துபோவதாக தெரிவித்து அழைப்பை துண்டித்துள்ளான். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நித்தின் ஹெப்பால் காவல் துறையினருக்கு விஷயத்தை தெரியப்படுத்தவே, காவல் துறையினர் லோகேஷ் தங்கியிருந்த அறைக்குள் விரைந்து சென்றுள்ளனர். கதவை உடைத்து விடுதியறைக்குள் செல்கையில் லோகேஷ் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதனையடுத்து இருவரின் உடலையும் மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், மேற்கூறிய விஷயங்கள் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Mysore Mandya College girl Affair with Married Person Murder and Death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->