மதுபோதையில் கர்ப்பிணி மனைவி, மாமியார், 2 மகன்கள் என 4 பேர் கொடூர கொலை.. கணவன் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் சரகூரு அருகேயுள்ள சாமேகவுடன உண்டி கிராமத்தை சார்ந்தவர் மணிகண்ட சாமி. இவர் கூலித்தொழிலையாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கங்கா (வயது 28). இவர்கள் இருவருக்கும் ரோஹித் என்ற 4 வயது மகன், சமர்த் என்ற 2 வயது மகன் இருக்கின்றனர். 

தற்போது, கங்கா 3 ஆவதாக கருத்தரித்த நிலையில், 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டசாமி பணிக்கு சென்றுவிட்டு வரும் சமயங்களில், தனது ஊதியத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து மதுபானம் வாங்கி குடித்து வந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினமும் மணிகண்ட சாமி மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், கங்கா ஊரடங்கை மேற்கோள்காண்பித்து பேசி, வருமானம் கிடைக்காமல் போய்விட்டால் எப்படி குடும்பத்தை நடத்துவது?., தினமும் மது அருந்திவிட்டு வந்தால் எப்படி? என கேட்டுள்ளார். 

மதுபோதையில் இருந்த கொடூரன் ஆத்திரமடைந்த நிலையில், கங்காவை கர்ப்பிணியென்றும் பாராது அடித்து உதைத்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த கங்காவின் தாய் கெம்பஜம்மா, மணிகண்ட சாமியிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். 

இதனையடுத்து, ஆத்திரத்திற்கு சென்ற மணிகண்டசாமி வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து கங்கா மற்றும் அவரது தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில், பலத்த காயமடைந்த கர்ப்பிணி கங்கா மற்றும் கங்காவின் தாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதிலும் ஆத்திரம் அடங்காமல் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த இரண்டு பிள்ளைகளையும் தாக்கிய நிலையில், அவர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 

இதன்பின்னர், மணிகண்டசாமி அங்கிருந்து தப்பி செல்லவே, இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், நால்வரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள மணிகண்டசாமியை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Mysore Coli worker Manikanda Samy Murder his Family Members Drinks 30 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->