3 குழந்தைகளுக்கு தாயான பெண்மணி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை.! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நஞ்சன்கூடு தாலுகாவில் இருக்கும் அதினாறுமுலே கிராமத்தை சார்ந்த 26 வயது பெண்ணுக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் அங்குள்ள அடகனஹள்ளி பகுதியில் உள்ள ஐ.டி.சி உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் 3 வருடமாக ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். 

பணிசுழற்சி முறையில் அவர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பணிக்கு வந்தவர் இரவு 8 மணியளவில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டு இருந்துள்ளார். இதன்போது, பெண்மணியை இடைமறித்த மர்ம நபர்கள் அவரை அங்குள்ள புதருக்கு கடத்தி சென்றுள்ளனர்.

அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்த காமுக கூட்டம், தனது ஆசையை நிறைவேற்றி கொடூரமாக கொலை செய்து தப்பி சென்றுள்ளனர். மறுநாள் காலையில் பெண்மணி இரத்த காயத்துடன் பிணமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த மர்ம நபர்கள் மது அருந்தியதற்கான அடையாளமும் இருந்ததால், அவரை காமுக கூட்டம் மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Mysore 3 baby Mother Murder and sexual abuse Police Investigation 27 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->