தாலி கட்டும் நேரத்தில் மயங்கிய மணமகள்., காதலால் போட்ட நாடகம் அம்பலம்.!
karnataka marriage stop for love issue may
கர்நாடக மாநிலத்தில் தாலி கட்டுவதற்கு சிறிது நேரம் முன்பு மயங்கி விழுவது போல் நடித்து, திருமணத்தை நிறுத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம், மைசூர் நகரில் இன்று காலை நடக்க இருந்த திருமணத்தை, மணப்பெண் வேறு ஒரு நபரை காதலித்ததால், மயங்கி விழுந்து திருமணத்தை நிறுத்தி உள்ள சம்பவம், திருமணத்துக்கு வந்திருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மணமகன் கையில் தாலி கொடுத்தவுடன், மணமகளுக்கு தாலி கட்டும் அந்த நேரத்தில், திடீரென மணமகள் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் மணமகளின் முகத்தில் தண்ணீர் தெளிக்கவே, மக்கள் தெளிந்த மணமகள், 'எனக்கு ஒன்றுமில்லை., எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை' என்று தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார், திருமணத்துக்கான செலவு 5 லட்சம் ரூபாயை மணமகள் வீட்டாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இரு தரப்பு இரு தரப்பினரிடமும் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், அந்த மணமக்கள் ஏற்கனவே ஒரு நபரை காதலித்து வந்ததும், அதனால் இந்தத் திருமணத்தை நிறுத்துவதற்காக மயக்கம் வருவது போல் நடித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
English Summary
karnataka marriage stop for love issue may