காதலி இருக்கும் போதே மற்றொரு காதல்.. இரண்டு கண்ணாலம் பண்ணுவாராம்.. காதலியின் முடிவால் கம்பி என்னும் காதோலன்..!
Karnataka Love girl suicide Love boy Cheated 15 April 2021
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் மதுவனஹள்ளி ஆஞ்சனேயபுரா பகுதியை சார்ந்தவர் சித்தப்ப சாமி என்ற உப்பி (வயது 23). இவரும், அதே பகுதியை சார்ந்த நஞ்சமணி (வயது 21) என்ற பெண்மணியும் கடந்த 7 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளியில் படித்து வந்த காலத்திலேயே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சித்தப்ப சாமிக்கும் - ஹேமாவதி என்ற பெண்மணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான தகவல் அறிந்த நஞ்சமணி சித்தப்ப சாமியிடம் கேட்டு இருக்கிறார்.
இதன்போது, சித்தப்ப சாமி நஞ்சமணியையும் - ஹேமாவதியையும் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த நஞ்சமணி தன்னை மட்டும் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தவே, சித்தப்ப சாமி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், நீ உயிருடன் இருக்கும் வரை ஹேமாவதியை திருமணம் செய்துகொள்ள முடியாது, நீ இறந்துவிடு என்று சித்தப்ப சாமி மிரட்டியுள்ளர். இதனால் மனமுடைந்துபோன நஞ்சமணி 2 நாட்களுக்கு முன்னதாக வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இவரை மீட்ட குடும்பத்தினர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யவே, மேல் சிகிச்சைக்காக மைசூர் கே.ஆர் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நஞ்சமணியை தற்கொலைக்கு தூண்டியதாக சித்தப்ப சாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Karnataka Love girl suicide Love boy Cheated 15 April 2021