வரதட்சணை வாங்கி வராத மருமகளுக்கு பாலியல் தொல்லை.. கணவரும் - மாமனாரும் அரங்கேற்றிய கொடூரம்.!
Karnataka Koramangala Woman Sexual and dowry Torture by Husband and Father In Law
வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண்மணிக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுத்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோரமங்களா பகுதியை சார்ந்தவர் ஹரிஷ் (வயது 31). இவருக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்த புதிதில் கணவன் - மனைவி சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், ஹரிஷ் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ய தொடங்கியுள்ளார்.
மேலும், பெண் வீட்டில் இருந்து ரூ.10 இலட்சம் பணம் வாங்கிவரக்கூறி ஹரிஷ் வற்புறுத்தவே, ஹரிஷின் தந்தை இராமகிருஷ்ணாவும் (வயது 61) பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இளம்பெண் வரதட்சணை வாங்கி வர மறுப்பு தெரிவிக்கவே, ஹரிஷ் மற்றும் அவரது தந்தை பெண்ணை அடித்து உதைத்து கொடுமை செய்துள்ளனர்.
ஹரிஷ் வீடுகளில் இல்லாத சமயங்களில் ஹரிஷின் தந்தை இராமகிருஷ்ணா வரதட்சணை வாங்கிவரக்கூறி தொல்லை கொடுத்தது மட்டுமல்லாது பாலியல் தொல்லையும் கொடுத்து இருக்கிறான். இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளான்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட பெண்மணி, கணவர் - மாமனாரின் தொல்லைகள் தாங்காமல் அங்குள்ள பசவனக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஹரிஷ் மற்றும் இராமகிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Karnataka Koramangala Woman Sexual and dowry Torture by Husband and Father In Law