நீர்வீழ்ச்சியில் சோகம்.. உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்ற சென்ற உறவினர், பெண் பலி..!
Karnataka Kodagu Madikeri Mallalli Waterfalls Woman Dhivya and Youngster Sasikumar died 19 April 2021
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மடிகேரி பகுதியில், புகழ்பெற்ற மல்லள்ளி நீர்வீழ்ச்சி இருக்கிறது. இங்கு அம்மாநிலத்தின் பல்வேறு பகுதியை சார்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மல்லள்ளி நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்நிலையில், மல்லள்ளி நீர்வீழ்ச்சிக்கு அங்குள்ள சுண்டிகொப்பா பகுதியை சார்ந்த சசிகுமார் (வயது 30) என்பவர், தனது உறவினர் திவ்யா (வயது 20) மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இதன்போது, எதிர்பாராத விதமாக நீர் வீழ்ச்சியில் இருந்து திவ்யா தவறி விழுந்துவிடவே, தண்ணீர் அதிகளவு சென்றதால் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
தண்ணீரில் மூழ்கி தத்தளித்த அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், செய்வதறியாது திகைக்கவே சசிகுமார் திவ்யாவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இதற்குள் திவ்யா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழக்க, அவரை காப்பாற்ற சென்ற சசிகுமாரும் நீரில் தத்தளித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக மடிகேரி காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி இருவரின் உடலையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இவர்களின் உடலைக்கண்டு உறவினர்கள் கதறியழுத நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மடிகேரி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இருவரின் உடலையும் மீட்டு மடிகேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Karnataka Kodagu Madikeri Mallalli Waterfalls Woman Dhivya and Youngster Sasikumar died 19 April 2021