திருமணம் நடக்க ஒருநாள் இருந்த நிலையில் மரண செய்தி.. கண்ணீரில் மணப்பெண் வீட்டார்.!!
Karnataka Karwar District Marriage Planned Youngster Died Corona Positive Before 1 Day Marriage
கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் மாவட்டத்தின் நந்தனக்கட்டா கிராமத்தை சார்ந்தவர் ரோஷன் பசவலகர் (வயது 32). இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயில் செயல்பட்டு வரும் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
ரோஷனுக்கும் - இளம்பெண்ணிற்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, இருவருக்கும் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் திருமணம் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்துள்ளனர்.
மேலும், திருமணத்திற்கு நிறுவனத்தில் விடுமுறை சொல்லிவிட்டு புனேயில் இருந்து ரோஷனும் சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த வாரத்தில் திடீரென ரோஷனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனையடுத்து, ரோஷனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால், மணமகள் வீட்டாரும் - ரோஷனின் வீட்டாரும் பெரும் துஆயிரத்திற்கு உள்ளாகி சொத்தில் இருந்தனர். மேலும், திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் உயிரிழந்த தகவலை அறிந்த நந்தனக்கட்டா கிராமத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Karnataka Karwar District Marriage Planned Youngster Died Corona Positive Before 1 Day Marriage