துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த கணவன்.. தாயை தேடி தவிக்கும் பச்சிளம் குழந்தை..!!
Karnataka Hassan wife murder by husband due to doubts
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா லே அவுட் பகுதியை சார்ந்தவர் லோகித். இவரது மனைவி நயனா (வயது 32). இவர்கள் இருவருக்கும் கடந்த 16 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் ஐந்து வயது மகன் இருக்கிறார்.
சித்ரதுர்கா பகுதியை சார்ந்த லோகித், தனது குடும்பத்தினருடன் ஹாசன் பகுதியில் வசித்து வந்த நிலையில், மனைவியுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களுக்குள் வழக்கம்போல தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த லோகித் துப்பட்டாவை எடுத்து மனைவியின் கழுத்தில் சுற்றி இறுக்கியுள்ளார். இதனால் மூச்சுத்திணறி நயனா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்த லோகித், மறுநாள் காலையில் அங்குள்ள காவல் நிலையத்திற்கு தாமாக சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், நாயனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், லோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தாயும் இறந்துவிட்ட நிலையில், தந்தையும் சிறைக்கு சென்றுள்ளதால், 5 வயது மகன் அனாதையாக அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தையை உறவினர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka Hassan wife murder by husband due to doubts