கர்நாடகாவில் திடீர் திருப்பம்! 11 எம்எல்ஏ க்கள் ராஜினாமா?! சபாநாயகருடன் சந்திப்பு!
Karnataka government is in danger
கர்நாடகாவில் ஏற்கனவே இப்போவோ, அப்போவோ என்று ஒரு நெருக்கடியான சூழலில் தான் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களையும் காங்கிரஸ் 79 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. ஒரு இடத்தில் சுயேட்சையும், ஒரு இடங்களில் பகுஜன் சமாஜ்வாதி, KPJP கட்சியும் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்தனர். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தற்போது ஆட்சி நடைபெற்று வருகின்றது. கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனில் 113 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ, சுயேச்சை, KPJP மற்றும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் 119 இடங்களை காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் வைத்திருந்தது.
இந்நிலையில் அவ்வப்போது அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கும் எம்எல்ஏக்கள், தொடர்ச்சியாக சமாதானம் செய்யப்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே மூவர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களும் சேர்ந்து சபாநாயகரை சந்தித்து உள்ளார்கள். அவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் ஜேடிஎஸ் காங்கிரஸ் கூட்டணி பலமானது 108 என பெரும்பான்மைக்கு கீழ் வருகிறது. இதனால் ஆட்சி கவிழுமா? அமைச்சரவை மாறுமா? மாநில முதல்வர் மாற்றப்படுவாரா? போன்ற குழப்பங்கள் கர்நாடகாவில் நீடித்து வருகிறது.
English Summary
Karnataka government is in danger