புதுமண தம்பதியின் விபரீத செல்பி ஆசை... அரங்கேறிய பெரும் சோகம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகா முரஹள்ளி கிராமத்தை சார்ந்தவர் ஆர்தேஷ். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்குள்ள சக்லேஷ்பூர் தாலுகாவில் அமைந்துள்ள ஹென்னாலே கிராமத்தை சார்ந்தவர் கிருத்திகா. 

இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதத்தின் போது திருமணம் செய்து கொண்ட நிலையில், ஊரடங்கு காரணமாக தம்பதிகள் இருவரும் அங்குள்ள முரள்ளி பகுதியில் தங்கியிருந்துள்ளனர். பின்னர் கட்டுப்பாடுகள் தற்போது சிறிதளவு தளர்த்தப்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை முதல் பணிக்கு வர அழைப்பும் வந்துள்ளது. 

ஆர்தேஷ் பணிக்கு செல்வதற்கு முன்னதாக பெற்றோரை சந்திக்க முடிவு செய்த நிலையில், புதுமண தம்பதிகள் வியாழக்கிழமை மாலை நேரத்தில் அங்குள்ள ஹேமாவதி அணைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

இருவரும் அங்கு செல்பி எடுக்க முயற்சி செய்த நிலையில், இருவரும் ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்கள் இரண்டு நாட்கள் தேடலுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka couple died in river during capture selfie in river side


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->