பேருந்துகள் இயக்கம், ஞாயிற்றுக்கிழமை கட்டாய ஊரடங்கு... முதல்வர் அதிரடி..!!
Karnataka cm announce bus movement in State and Sunday curfew amid
இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தலானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு அமலாக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதிலும் கடுமையான உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வெளியே வரக்கூடாது என்ற அதிரடி தடையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பல மாநிலத்தில் கரோனா கட்டுக்குள் இருந்தாலும், தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு நான்காவது முறையாக நீட்டிப்பு செய்து, மே மாதம் 31 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பேருந்துகளில் 30 பயணிகளுடன் பேருந்துகள் இயக்கலாம் என்றும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கும் இது பொருந்தும் என்றும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், இதனைப்போன்று சலூன் மற்றும் பிற கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிறுக்கிழமையில் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka cm announce bus movement in State and Sunday curfew amid