ஆஸ்பத்திரியில் அருமையான தூக்கம்.. நாயால் பதறிப்போன மக்கள்.!
Karnataka Chitradurga Dog Sleeps Govt Hospital Children ward Bed
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா நகரில் மாவட்ட தலைமை மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கென சிகிச்சை பிரிவு தனியாக உள்ளது. இந்நிலையில், குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தெருநாய் படுத்து உறங்கியுள்ளது.
மேலும், மருத்துவமனை நிர்வாகம் ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்கு வந்தால் படுக்கை வசதி இல்லை என்று கூறி அனுப்பிவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குழந்தைகள் சிகிச்சை பிரிவில் நாய் படுத்து உறங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் வெளியாகி வைரலாகிய நிலையில், இதனைக்கண்ட பலரும் பணிகளில் அலட்சியமாக இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka Chitradurga Dog Sleeps Govt Hospital Children ward Bed