சார்ஜ் போடுவதில் தகராறு.. வடமாநில இளைஞர் நட்பூவால் அடித்தே கொலை.!! - Seithipunal
Seithipunal


செல்போனுக்கு சார்ஜ் போடுவதில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் நண்பரை மற்றொருவர் அடித்தே கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ராஜாஜிநகர் பகுதியை சார்ந்தவர் அணில் (வயது 27). இவர் மத்திய பிரதேசம் மாநிலத்தை சார்ந்தவர் ஆவார். இவர் பெங்களூரில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அணிலுடன், மத்திய பிரதேசம் மாநிலத்தை சார்ந்த ஆகாஷ் என்ற 29 வயது இளைஞரும் தங்கி இருந்து பணியாற்றி வந்துள்ளார். 

இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அணிலும் - ஆகாஷும் சம்பவத்தன்று மதுபானம் அருந்தியுள்ளனர். மதுபோதையில் 2 பேரும் வீட்டிற்கு வந்த நிலையில், தங்களின் செல்போனை சார்ஜ் போட இருவரும் முயற்சித்துள்ளனர். 

அங்கு ஒரேயொரு செல்லுக்கு மட்டுமே சார்ஜ் போடும் வசதி இருந்த நிலையில், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட நிலையில், அணிலை ஆகாஷ் வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து பலமாக தாக்கியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அணிலை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore Rajaji Nagar North Indian Youngster Native Madhya Pradesh Murder by Friend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->