பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு...! அறிவுரை கூறிய பெற்றோரின் தலையை சிதைத்து கொலை செய்த மகன்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பீனியாவில் இருக்கும் அரசு அலுவலக காவலாளியாக பணியாற்றி வருபவர் அனுமந்தாரய்யா (வயது 42). இவரது மனைவி ஹென்னம்மா (வயது 34). ஹென்னம்மா துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அலுவலகத்தில் இருக்கும் சிறிய வீட்டில் தம்பதிகள் தங்களது பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதியன்று அனுமந்தாரய்யா மற்றும் ஹென்னம்மா தலை நசுங்கியபடி கொலை செய்யப்பட்டு இருந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக பீனியா காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையின் அதிர்ச்சி திருப்பமாக, தம்பதிகளின் 14 வயது மகனை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், சிறுவன் தனது சொல்லை கேட்காமல் சுற்றித்திரிந்த நிலையில், மகனை திட்டிய தந்தை அனுமந்தாரய்யா அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். 

தனது திட்டப்படி தந்தையின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நிலையில், இதனை தடுக்க வந்த தாயையும் கொலை செய்தது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் சிறுவன் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான். 

பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு..

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore 14 Aged Son Murder his Mother and Father due to Father give Advice about Life


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->