உடலில் 17 இடங்களில் பெண் குத்திக்கொலை.. கள்ளக்காதல் உறவால் நடந்த பயங்கர கொலை.!!
Kanyakumari Kerala Tamilinadu Border Village Woman Murder due to Affair Issue
திருமணம் முடிந்த தம்பதிகளின் திருமணத்தை மீறிய உறவால் இறுதியில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரளா - தமிழக எல்லையில், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட நெடுமங்காடு கிராமத்தை சார்ந்தவர் சூரிய காயத்ரி (வயது 20). இவர் தனது வீட்டு சமையல் அறையில் பணியாற்றிக்கொண்டு இருக்கையில், ஆரியநாடு பகுதியை சார்ந்த அருண் (வயது 28) என்பவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். சமயலறையில் இருந்த சூரிய காயத்ரியை 17 முறை கழுத்து, வயிறு உள்ளிட்ட பாகத்தில் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கிறார்.
உடலில் 17 இடங்களில் பாய்ந்த கத்திக்குத்து தாக்குதலால் நிலைகுலைந்து போன பெண்மணி உயிருக்காக துடிதுடிக்க, அவரை காப்பாற்ற வந்த மாற்றுத்திறனாளி தாயார் வத்ஸ்லாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் அலறலை கேட்டு வந்த சூரிய காயத்ரியின் தந்தை சிவதாசனுக்கும் கத்திக்குத்து விழுந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்து வந்துள்ளனர். அவர்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மூவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட, சூரிய காயத்ரி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அருண் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று தோட்டப்பகுதியில் மறைந்து இருந்துள்ளார். அங்கு திரண்டு இருந்த மக்கள், தோட்டத்தில் தலைமறைவாகி பதுங்கி இருந்த அருணை சுற்றிவளைத்து அடித்து நொறுக்கி காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
பின்னர், காவல் துறையினர் இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், சூரிய காயத்ரி - அருண் நெருங்கி பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். ஆனால், அருண் தொடர்ந்து சூரிய காயத்ரிக்கு தொல்லை கொடுத்து வந்த நிலையில், அருணின் மீது பலமுறை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சூரிய காயத்ரிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து, கணவரை பிரிந்து கடந்த 6 மாதமாக தாயாருடன் வசித்து வருகிறார். குற்றவாளி அருணுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் பழக்கம் இறுதியில் கொலையில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanyakumari Kerala Tamilinadu Border Village Woman Murder due to Affair Issue