குடும்பத்துடன் மருமகளை அடித்து வரதட்சணை கொடுமை செய்த முன்னாள் தமிழக நீதிபதி..! வெளியான பேரதிர்ச்சி வீடியோ காட்சிகள்..!!
judge attack his son wife due to money
தற்போதுள்ள நிலைமையில் இணையத்தின் மூலமாக பல விஷயங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில்., ஓய்வு பெற்ற நீதிபதி தனது மருமகளை அடித்து உதைக்கும் காட்சிகளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ காட்சியில்., இந்த பிரச்சனை கடந்த ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் தேதியன்று நடந்துள்ளதாகவும்., இரவு 11 மணியளவில் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ காட்சியில்., இளம் வயதுள்ள நபரொருவர்., பெண்ணை கொடூரமாக அடித்துள்ள நிலையில்., கீழே விழுந்த பெண்மணி., எழுந்திருக்க முயற்சிக்கும் சமயத்தில்., வயதான தோற்றமுடைய நபர்., பெண்ணை மீண்டும் அடித்து., திட்டுகிறார். இந்த சமயத்தில்., அங்கிருந்த மற்றொரு பெண்மணி., நீதிபதியின் மருமகளை பிடித்து கொண்டு., அவர் வீட்டினை விட்டு வெளியேறும் முயற்சியை தடுத்து விடுகின்றனர்.
மேலும்., தாயை நோக்கி வரும் குழந்தையை நீதிபதியின் மகன் தடுக்கும் நிலையில்., குழந்தையின் முன்னிலையிலேயே தாயார் அடிக்கப்படுகிறார். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட நபர் யார் என்று கவனிக்கும் சமயத்தில்., ஹைதராபாத் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பணி செய்து ஓய்வு பெற்ற நூட்டி ராமமோகன ராவ் மற்றும் அவரது குடும்பத்தார்கள் என்பது தெரியவருகிறது.
தற்போதைய வருடத்தின் ஏப்ரல் மாதத்தில்., நீதிபதியின் மருமகளான சிந்து சர்மாவை., கணவர் வீட்டினர் அனைவரும் சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்து வந்ததும்., இதனால் பெண் கடுமையாக தாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த கொடூரத்தில் ஈடுபட்ட அனைவரின் மீது சிந்து புகார் அளித்துள்ள நிலையில்., இந்த புகார் கடந்த ஏப்ரல் மாதத்தின் 26 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
judge attack his son wife due to money