ஏப்ரல் 1 ம் தேதியில் இருந்து ஸ்ட்ரைக்.! போக்குவரத்து ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு.!!
jet airways employees announce April 1 date form strike
அதிகளவு நிதி நெருக்கடியில் இந்தியாவின் பிரதான விமான போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு சம்பளம் வழங்கி முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை ஈடுகட்டுவதற்கு பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று பணியாளர்களுக்கு வழங்க முடிவெடுத்த திட்டமானது தோல்வியை தழுவிய நிலையில்., விமான ஊழியர்கள் வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் பணி நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கியின் நிதிஉதவியானது மார்ச் 29 ம் தேதியன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில்., விமானிகளின் சம்பள பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கருதப்பட்ட நிலையில்., பாரத ஸ்டேட் வங்கி கடன் தொகையை அளிக்கவில்லை.
இதனை அறிந்த ஊழியர்கள் அறிவித்ததை போன்றே பணி நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். வேலை நிறுத்த போராட்டத்தை கணக்கில் எடுத்து கொண்டு., சம்பளத்தை வழங்குவதாக நிறுவனத்தில் இருந்து எந்த விதமான அறிவிப்பும் வராத நிலையில்., வேலை நிறுத்தத்தை தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் சில விமான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டாலும்., இதனை போன்று பல்வேறு நிறுவனங்கள் விமான சேவையில் ஈடுபட்டு வருவதால் விமான சேவையில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என்றாலும்., பணியாளர்களின் சம்பளத்தை வழங்காமல் தொடர்ந்து பணியாற்ற கூறியும்., நிறுவனத்தின் நிலை அறிந்து பணியாற்றிய சூழலில்., பணியாளர்களுக்கு தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
English Summary
jet airways employees announce April 1 date form strike