ரேஷன் கார்டில் இயேசு படம்... கொந்தளித்த பொதுமக்கள்..!
jesus image in ration card
ஆந்திர மாநிலத்தில் ரேஷன் கார்டில் இயேசு படம் போட்டிருப்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. இதைப் பார்த்த பலரும் ஜெகன்மோகனுக்கு எதிரான கருத்தை தெரிவித்து வந்தார்கள். கடைசியில், இந்த வேலையை செய்தது தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் என்பது தெரியவந்தது. சமூக ஊடகங்களில் ஆந்திர மாநில ரேஷன் கார்டுகளில் இயேசுவின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.
மேலும், ஜெகன் மோகன் கிறிஸ்தவர் என்பதால் மதமாற்றம் வேகமாக நடக்கிறது என்று பலரும் வதந்திகளை பரப்பி வந்தார்கள். இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வடலமுரு பகுதியைச் சேர்ந்த ரேஷன் கார்டு டீலர் ஒருவரின் கணவர் தீவிர தெலுங்கு தேசம் ஆதரவாளர்.
அவர்தான், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டை பிரிண்ட் அவுட் எடுத்து தரும்போது அதில் இயேசுவின் படத்தையும் பிரிண்ட் செய்திருக்கிறார். இவர் இதற்கு முன்பு 2016ம் ஆண்டு சாய்பாபா படத்தையும், 2017, 18ம் ஆண்டுகளில் வெங்கடாச்சலபதி படத்தை பிரிண்ட் செய்து கொடுத்துள்ளார். தற்போது இயேசுவின் படத்தை இவர் பிரிண்ட் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால், அவர் மதம் மாறியவரும் கிடையாது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள்
English Summary
jesus image in ration card