வாயில் மலத்தை திணித்து.. சிறுநீரை குடிக்க வைத்து நிகழ்ந்த கொடூரம்.! பகீர் காரணம்.!
Jarkant Harassment against 4 peoples
மாந்திரீகம் மற்றும் சூனியம் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை இரும்பு கம்பியால் அடித்து சரமாரியாக தாக்கியும், அவர்களது வாயில் மலம் மற்றும் சிறுநீரை திணித்து உண்ண வைத்த கோர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இந்த சம்பவத்தால் பாதிப்பிற்கு உள்ளான அனைவருமே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த காவல்துறை புகாரின் அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொடூரமான சம்பவத்திற்கு காரணமாக இருந்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆய்வாளர் கூறியுள்ளார்.
மாந்திரீகம் மற்றும் சூனியம் செய்ததாக கூறி இப்படி மோசமான செயல்களில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Jarkant Harassment against 4 peoples