ஜம்முவில் பயங்கரம்.. அப்பாவி மக்களை கொலை செய்த பயங்கரவாதிகள்.. அதிரடி நடவடிக்கை எடுத்த இராணுவம், காவல்துறை.!!
Jammu police and indian army take action against terrorist
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் காவல் துறையினரும், இந்திய இராணுவத்தினரும் பல அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து மக்களை காத்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் குழுவை சார்ந்த பயங்கரவாதிகள் கடந்த 12 நாட்களாக, அப்பகுதியில் வசித்து வரும் அப்பாவி மக்களை கொலை செய்துள்ளனர். சுமார் நான்கு அப்பாவி மக்களை கொலை செய்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த கொடூர கொலைகளை செய்த இருவரின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து பயங்கரவாதிகளை தேடி காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இராணுவத்தினரும் சம்பவ இடத்தில் களத்தில் இறங்கவே, இராணுவத்தினர் 4 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.
தொடர் தேடுதல் வேட்டையில் காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க வேண்டாம் என்று ஜம்மு இராணுவ தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Jammu police and indian army take action against terrorist