சித்து வேலையை பார்த்து பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் நுழையவிட்ட பாக். இராணுவம்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. பாகிஸ்தான் இராணுவமும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் பொருட்டு, பல்வேறு சித்து வேலைகளை புரிந்து வருகிறது. கடந்த வாரத்தில் கூட இரண்டு உளவு டிரோன்கள் இந்திய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இந்நிலையில், காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் எத்தனை பயங்கரவாதிகள் உள்ளார்கள் என்பது தொடர்பான விபரம் இல்லை. 

ஏற்கனவே பாகிஸ்தான் இராணுவம் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் பொருட்டு, இராணுவத்தை ஒருபுறத்தில் பரபரப்பாக்கிவிட்டு மற்றொரு புறத்தில் பயங்கரவாதிகள் எல்லை மீறி ஊடுருவதை ஊக்குவித்து வருவதாக குற்றசாட்டு இருக்கிறது. இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த வாரம் டிரோன் மற்றும் இப்போது பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jammu Kashmir Terrorist attack starts Indian Army Taking Charge 1 November 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->