இல்லீகளாக எல்லைதாண்டி சென்ற பணம்.. அதிரடி காட்டிய ஜம்மு காவல்துறை.!!
Jammu Kashmir Police hold culprits illegal money transaction for terrorist
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி கொடுத்து உதவி செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தலைவர் முகேஷ் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், காவல் அதிகாரி முகேஷ் சிங் கூறுகையில், " ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் முடஸ்டர் பரூக் பத் ஈடுபட்டதாகவும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருடன் சேர்ந்த கூட்டாளிகள் 5 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த இரண்டு முதல் மூன்று வருடங்களாக, இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும், அவற்றில் சில மும்பையில் இருந்து மின்னணு முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் " தெரிவித்துள்ளார். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Jammu Kashmir Police hold culprits illegal money transaction for terrorist