அரங்கேறவிருந்த மிகப்பெரிய தாக்குதல்.. அதிஸ்டவசமாக தப்பித்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பெரிய கார் வெடிகுண்டு தாக்குதலை பாதுகாப்பு படையினர் தற்போது தடுத்துள்ளனர். சுமார் 20 கிலோவுக்கு மேல் தயாராக வைக்கப்பட்டு இருந்த கார் வெடிகுண்டு வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

போலி பதிவெண் கொண்ட காரை சோதனை சாவடியில் நிறுத்த காவல் அதிகாரிகள் தடுக்கவே, காரை நிறுத்தாமல் வேகமாக இயக்க காரை இயக்கி வந்த நபர் முயன்றுள்ளார். இது தோல்வியடைந்து கார் சிக்கியுள்ளது. 

மேலும், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதக பாதுகாப்பு படையினருக்கு இது குறித்த தகவல் தெரியவந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாப்ரோது கண்டறியப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க வெடிகுண்டு அகற்றும் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

காரில் பயங்கரவாதியும் வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நல்ல வேலையாக மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். கடந்த சில மாதமாகவே பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் பதில் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu Kashmir car bomb attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->