பயங்கர ஆயுதத்துடன் அத்துமீறி நுழைவு.. போட்டுத்தள்ளிய இந்திய இராணுவம்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், இந்த சூழலில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஜம்மு காஷ்மீரில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதிலும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த சில தினமாகவே பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில், பயங்கரவாத தளபதி உட்பட 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்முவில் இந்திய எல்லை பகுதியில் பயங்கரவாதிகள் நுழைய வாய்ப்புகள் இருப்பதாக இரகசிய தகவல் கிடைத்தது. 

இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், அங்குள்ள நவுசாரா எல்லை பகுதியில் 3 பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதத்துடன் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். 

இவர்கள் பாதுகாப்பு படையினரின் கண்களில் அகப்படவே, இருதரப்பிற்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. இந்த சண்டையின் இறுதியில் 3 பயங்கரவாதிகளும் அடுத்தடுத்து சுட்டு கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu Kashmir border terrorist killed by Indian Army


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->