எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை.. இராணுவ வீரர் வீரமரணம்.!
Jammu Kashmir 3 Terrorist Encounter by Indian Army in Line Of Control
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடைபெறும் பண்டிகைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு காத்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது இருந்தது.
இதனையடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது பாகிஸ்தான் இராணுவமும் பயங்கரவாதிகளுக்கு மறைமுக உதவி செய்து வருகிறது. இந்திய இராணுவத்தின் கவனத்தை ஒருபுறம் திசை திருப்பி, மற்றொரு புறத்தில் பயங்கரவாதிகளை எல்லை தாண்டி ஊடுருவ வைக்கிறது.
இந்த நிலையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய இராணுவ வீரர் வீரமரணம் அடைந்த நிலையில், இந்திய தரப்பில் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Jammu Kashmir 3 Terrorist Encounter by Indian Army in Line Of Control