சந்திராயன் 3, ஆதித்யா, சுகன்யான்... சாதனை படைக்கபோகும் இந்தியா.. இஸ்ரோ சிவன் பேச்சு.!
ISRO Sivan Speech after Successfully Launch PSLV 50 CMS 01 17 December 2020
பி.எஸ்.எல்.வி 50 சி.எம்.ஸ் 1 தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதன்பின்னர், இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார்.
இந்த உரையில், " ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ஜி-சாட் 12 செயற்கைகோளின் ஆயுட்காலம் முடிவடைந்தது. தற்போது ஏவப்பட்டுள்ள ஜி-சாட் பி.எஸ்.எல்.வி 50 சி.எம்.ஸ் 1 செயற்கைகோள் மூலமாக இந்தியா, அந்தமான், லட்சத்தீவுகளில் தகவல் தொழில்நுட்பம் மேம்படும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 77 ஆவது செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி 50 சி.எம்.ஸ் 1 ஆகும். பி.எஸ்.எல்.வி 51 செயற்கைகோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும். பி.எஸ்.எல்.வி 50 சி.எம்.ஸ் 1 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சந்திராயன் 3, ஆதித்யா, சுகன்யான் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.
விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் அனைத்தும் சாத்தியமாகியுள்ளது. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களின் குடும்பத்தாருடன், கொரோனா பாதுகாப்பு வழிமுறையுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள்.. ஜெய்ஹிந்த் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
ISRO Sivan Speech after Successfully Launch PSLV 50 CMS 01 17 December 2020